search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்பரம்பாக்கம் ஏரி"

    • ரூ.34 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கும்.
    • தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது ஏரியில் 3,123 மில்லின் கனஅடி தண்ணீர் உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் மற்றும் பூண்டிஏரியில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது திறக்கப்படும் உபரி நீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், வழுதிளம்பேடு, திருநீர் மலை வழியாக அடையாறு ஆற்றில் வீணாக கலந்து வருகிறது.

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரத்தில் கைவிடப்பட்ட கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீர் சுத்திகரித்து குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்குவாரியில் தேங்கி இருக்கும் தண்ணீர் அனைத்தையும் சென்னை குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது தண்ணீர் வீணாக அடையாறு ஆற்றில் கலப்பதை தடுத்து அதனை கல்குவாரி குட்டையில் சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக உபரிநீர் செல்லும் பாதையில் காவனூர் அருகில் இருந்து கல்குவாரிக்கு தனியாக கால்வாய் அமைக்கும் பணி ரூ. 34 கோடி செலவில் அமைய இருக்கிறது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட இருக்கிறது. இதன் பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் காவனூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை சிக்கராயபுரம் கல்குவாரி பகுதிக்கு கொண்டு செல்ல சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

    கடந்த மாதம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை(மொத்த உயரம் 24 அடி) தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் வீணாக அடையாறு ஆற்றில் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை சிக்கராயபுரத்தில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிகளுக்கு கொண்டு செல்ல 2 கி.மீ., நீளத்துக்கு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ரூ.34 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கும். 250 கனஅடிதண்ணீரை கால்வாய் வழியாக சுமார் 20 நாட்களுக்கு அனுப்பினால் குவாரிகளில் 500 மில்லியன் கனஅடி சேமிக்க முடியும்.

    ஏற்கனவே தண்ணீர் நிரம்பிய குவாரிகளில் இருந்து சென்னை மெட்ரோ வாட்டர் தினமும் சுமார் 10 மில்லியன் லிட்டர் நீரை குடிநீருக்கு எடுத்து வருகிறது. குவாரிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 3.5 கி.மீட்டர் நீளமுள்ள குழாய் சமீபத்தில் பதிக்கப்பட்டு உள்ளன.

    செம்பரம்பாக்கம் உபரி நீர், கல்குவாரிக்கு திருப்பி விடப்படுவதால் வெள்ள பாதிப்பும் குறையும். தற்போது குவாரிகளில் 300 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலிப்பாக்கம் மற்றும் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள குவாரிகளை குடிநீருக்கு பயன்படுத்து வதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம். பம்மல் மற்றும் பல்லாவரம் பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன்காரணமாக 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் நீர் இருப்பு 34 அடியை எட்டியது. இதேபோல் 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 9817 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதம் ஆகும்.

    இந்த தண்ணீரை சென்னை குடிநீருக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்துக்கு சப்ளை செய்யமுடியும். பருவமழை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது. மற்ற ஏரிகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. சிறிய ஏரியான கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி 96 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி.இதில் 2430மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 325 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081மி.கனஅடி. இதில் 498மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 22 கனஅடி தண்ணீர் வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. உபரி நீராக 100 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 237 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியில் மொத்த கொள்ளவான 3231 மி.கனஅடியில் 2589 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 180 கனஅடி தண்ணீர் வருகிறது. 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 480 மி.கனஅடி நீர் நிரம்பி காணப்படுகிறது.

    • இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது.
    • இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்று காலை 22 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது. ஏரியில் 3130 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தற்போது பலத்த மழை இல்லை என்றாலும் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பை ஒரு அடி குறைத்து 21 அடிக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஏரியில் நீர் இருப்பை 22 அடியில் வைத்திருந்தால் பருவமழை தீவிரம் அடையும்போது உடனடியாக உபரி நீர் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஏரியில் நீர் இருப்பை 21 அடியாக குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஏரியில் இருந்து தொடர்ந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படும் என்று தெரிகிறது. பலத்த மழை பெய்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் ஓராண்டுகளில் 540 எம்.எல்.டி. உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    • சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு நீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்

    தமிழக சட்டப்பேரவைக்  கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது:-

    செம்பரம்பாக்கம் ஏரியில் ஓராண்டுகளில் 540 எம்.எல்.டி. உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு நீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    செம்பரம்பாக்கத்தில் தற்போது 240 எம்.எல்.டி. தண்ணீர் உள்ளது. ஏழாண்டு காலமாக இதை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையிடம் அனுமதி பெறப்பட்டு தற்போது அந்த குழாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் செம்பரம்பாக்கம் ஏரியில் 540 எம்.எல்.டி. உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும்.

    கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகளில் நீர் மட்டம் கிடு, கிடுவென அதிகரித்து வருகிறது.

    தொடர்ந்து தண்ணீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 22 அடியை எட்டியது. ஏரியில் 3132மி.கன அடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கி றது. இன்று காலை நிலவரப் படி ஏரிக்கு 393 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும் அவ்வப்போது பலத்த மழை பெய்வதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரிநீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதலில் இன்று காலை உபரி நீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை திறக்கப்படும் உபரி நீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எனினும் பலத்த மழை பெய்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பருவமழை தொடங்கு வதற்கு முன்பே செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் முழுவதும் எந்த பயனும் இன்றி வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பைதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • ஏரியில் நீர் இருப்பு 21.96 அடியாகவும் கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
    • நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இன்று ஏரியில் நீர் இருப்பு 21.96 அடியாகவும் கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

    இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை காலை (08.10.2023) 10.00 மணி அளவில் விநாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 100 கனஅடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

    • கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
    • புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 16.75 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. 5 ஏரிகளிலும் மொத்தம் 9,076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 77 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும்.

    கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரம் நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் சேர்த்து 7 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 9 டி.எம்.சி.ஆக அதிகரித்து உள்ளது. கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஒரு மாதத்தில் ஏரிகளில் நீர் இருப்பு 2 டி.எம்.சி அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணா நீர் மற்றும், மழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்த உயரமான 35 அடியில் 34 அடியை நெருங்கியதால் ஏரியில் இருந்து 2500 கனஅடிவரை உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 1020 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் நீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2761 மி.கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 1200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து உள்ளதால் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

    புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 16.75 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2359 மி.கனஅடிநீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 371 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தண்ணீர் இருப்பு 22 அடியை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி 21.79 அடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3064 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 418மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 374 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 474 மி.கன அடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 395 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நெருங்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    மொத்த உயரமான 35 அடியில் 33 அடியை தாண்டியதால் பூண்டி ஏரியில் இருந்து கடந்த வாரம் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்தும் 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் இருந்தது.

    தற்போது மழை அதிகம் இல்லாததால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து 1200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் மூலம் 630 கனஅடியும், உபரிநீராக 500 கனஅடியும் செல்கிறது.

    பூண்டி ஏரியின் நீர் மட்டம் 34 அடியை(மொத்த உயரம் 35 அடி) நெருங்கி உள்ளது. ஏரியில் தற்போது 33.85 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. விரைவில் ஏரியின் நீர்மட்டம் 34 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2776 மி. கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 21.73 அடியாக பதிவானது. ஏரிக்கு 368 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3048 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 16.66 அடியாக உள்ளது. ஏரிக்கு 371 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 2342 மி.கனஅடி தண்ணீர் ஏரியில் உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    • 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன.

    இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக இந்த ஏரிகள் நிரம்பி வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1022 ஏரிகளில் தற்போது வரை 38 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பக்கம் ஏரிக்கும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 23 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.5 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் பராமரிப்பு பணி நடைபெற்றது. மதகுகள் தண்ணீர் திறப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டியவுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    • இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது.
    • பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

    இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 1000 கனஅடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று அது 1684 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் பூண்டி மற்றும் ஆந்திரா பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.

    காலை 9 மணியளவில் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக 2500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.

    இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான் சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2902 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான் 3645 மி.கனஅடியில் 2860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 843 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2237 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    • பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 1284 கனஅடியாக உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் கிருஷ்ணா தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். இதில் நேற்று ஏரியில் நீர் இருப்பு 34 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவும் திருவள்ளூர் மற்றும் ஆந்திரா பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு நேற்று 1520 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து இன்று மேலும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி ஆகும். இதில் 2823 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 630 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. உபரி நீர் திறப்பும் 1684 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பூண்டி ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 3.5 டி.எம்.சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்து உள்ளது. கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தொடர்ந்து இருக்கும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரியில் இருந்து உபரி நீராக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரி நிரம்பி உள்ளதால் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 1284 கனஅடியாக உள்ளது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2799 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 20.78 அடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புழல் ஏரிக்கு 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2217 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. மொத்த உயரமான 21 அடியில் 15.98 அடிக்கு தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரிக்கு 93 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் மொத்த கொள்ளவான 1081 மி.கனஅடியில் 165 கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    • அனகாபுத்தூரில் ரூ.18.88 கோடி செலவில் புதிதாக உயர்நிலை மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வினியோகம் 3.40 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் தற்போது குடியிருப்புகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளது. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் இருந்தது. இதனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் கிணற்று நீர் மற்றும் போர்வெல் தண்ணீரையே நம்பி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து அனகாபுத்தூர் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து அனகாபுத்தூரில் ரூ.18.88 கோடி செலவில் புதிதாக உயர்நிலை மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி. பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நீண்டகாலமாக நிலுவையில் இருந்த குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் இனி அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு 3 முறை தண்ணீர் வழங்க முடியும். இதற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மார்க்கெட் தெரு மற்றும் விநாயகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு மேல்நிலைத் தொட்டிகளையும் ஒரு மாதத்தில் தாம்பரம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பம்மல் மண்டலத்தில் 15 ஆயிரத்து 973 வீடுகளில் வசிக்கும் 60 ஆயிரத்து 697 பேர் பயன் அடைவார்கள். தினமும் 8.19 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வினியோகம் 3.40 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என்றார்.

    ×